2025 ஜூன் 18, புதன்கிழமை

778 Kg ஹெரோயின் கடத்தல்;சந்தேகநபர்களை தடுத்து விசாரிக்க அனுமதி

Simrith   / 2025 மே 29 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தெற்கு கடற்கரையில் படகு மூலம் சுமார் 778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 11 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு (PNB) அனுமதி அளித்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் அவசியத்தைக் காரணம் காட்டி, PNBயின் கோரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபர்கள் பெதுரு ஹேவகே பிரசன்ன, தினேஷ் சஞ்சீவ, பிரதீப் நிஷாந்த, சுதேஷ், அஜித் பிரியந்த, டொன் நிலான் சம்பத், ருவன் நிஷாந்த, சுனில் சாந்த, நளின் பிரியந்த மற்றும் ஹெண்டிகே வசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் கடற்பரப்பில் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவைப் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டபோது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகக் கூறி, மேலும் விசாரணைக்காக அவர்களைத் தடுத்து வைக்க அனுமதி கோரினர்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, சந்தேக நபர்களை தொடர்ந்து விசாரணை செய்வதற்காக ஒரு வார காலத்திற்கு பொலிஸ் காவலில் வைக்க அனுமதி அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .