2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

9 பேரது இராஜினாமா கடிதங்களும் ஜனாதிபதியிடம்

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை, இராஜாங்கம் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் எம்.பிக்கள் 9 பேரும், தங்களுடைய இராஜினாமா கடிதங்களை, ஜனாதிபதி செயலகத்துக்கு, இன்று (06) பிற்பகல் அனுப்பி வைத்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம், அமீல் அலி, பைசால் காசிம், மொஹமட் ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரே, இவ்வாறு தங்களுடைய இராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர் என்று, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .