2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

9 முதல் ரயில் வேலைநிறுத்தம்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள், நிர்வாக மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் ஆகியோர் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

“நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என, ரயில் நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.

“மேற்குறிப்பிட்ட தரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்ட எம்.பீ. 1 மற்றும் 2 சம்பளம் வழங்குவது தொடர்ச்சியாக தாமதமாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளளோம்” என்றார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .