2024 மே 02, வியாழக்கிழமை

917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 14 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று  917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த கைதிகள் நேற்று விடுதலை பெற்று சிறைச்சாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர் என சிறைசாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பின் கீழ் 21 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 12 கைதிகள் நேற்று காலை அங்கிருந்து வௌியேறினர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .