2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

CPC முன்னாள் தலைவர் கைது

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, ​​மூன்று நீண்டகால விலைமனு கோரல்களை ரத்து செய்து அதிக விலைக்கு ஸ்பாட் டெண்டர்களை செயல்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தம்மிக்க ரணதுங்க கைது செய்யப்பட்டார்.

அந்தச் செயல்முறையின் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்சம்   அல்லது   ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மேலும் கூறுகிறது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .