Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையின் போது, கருத்துச் சுதந்திரத்தை 'கட்டுப்படுத்துதல்' தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் இலங்கை மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
நாடுகள் எதிர்கொண்டு வருகின்ற முன்னனுபவங்கள் எதுவுமற்ற இத்தகைய சவால்கள் தொடர்பில், உணர்வுபூர்வமாகச் செயற்படுமாறும் ஒத்துழைப்பு மனப்பாண்மையில் ஈடுபடுமாறும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் இலங்கை வலியுறுத்தியது.
குறிப்பாக, கோவிட் 19 தொற்றுநோய் நிலைமையின் போது, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நலன்களில் தவறான மற்றும் முரணான தகவல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் அரசாங்கங்களும் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட்டுக்கு, ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பதில் நிரந்தரப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள், 2020 மே 18ஆம் திகதி இடம்பெற்ற 73ஆவது உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவிட் 19 தொடர்பான பிரதிபலிப்புகளுக்கான ஒருமித்த தீர்மானத்துக்கு அமைவானவை என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உலக சுகாதாரத் தாபனத்தால் பாராட்டப்பட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றியானது, இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைப் பாதுகாப்பதற்கும் உதவியது.
“பெரும்பாலும் அனைத்துத் தரப்பினரும் தேசிய பிரதிபலிப்புகளுடன் ஒத்துழைத்ததன் காரணமாகவும் துல்லியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கியதன் விளைவாகவுமே இது சாத்தியமானது” என, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago