2025 மே 17, சனிக்கிழமை

மஹிந்தவின் ஊடகச் செயலருக்கு FCID அழைப்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவுக்கு, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்திவரும் பொலிஸ் பிரிவு, விசாரணைக்கான அழைப்பை விடுத்துள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிதி மோசடி குறித்த விசாரணைக்கு வாக்குமூலம் பெறுவதற்காகவே மேற்படி பொலிஸ் விசாரணைப் பிரிவு இந்த அழைப்பை விடுத்துள்ளது.

ரொஹான் வெலிவிட்ட, சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .