2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஃபானியின் கோரம்: மறுவாக்குப்பதிவு நடைபெறும்

Editorial   / 2019 மே 17 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குறித்த புயலினால் பாதிக்கப்பட்ட பூரி மாவட்டத்தின் மூன்று வாக்குச்சாவடிகள் உட்பட 34 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஃபானி புயல் கடந்த மூன்றாம் திகதி ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இதன் காரணமாக குறித்த மாநிலத்தில் 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 525 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .