2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிபதிகளும் பிரிவினைவாத அமைப்புகளின் உறுப்பினர்​களென, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தமைத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, ஒருங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்புப் பிரிவினர், கொழும்பு பிர​தான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று தெரிவித்துள்ளனர்.

அசாத் சாலி தொடர்பில், சட்டத்தரணி சீ. தொலவத்தவால் செய்யப்பட்டுள்ள முறைபாட்டுக்கு அமைய, முன்னாள் ஆளுநருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

மே மாதம் 4ஆம் திகதி அசாத் சாலியின் அறிவிப்பு தொடர்பில் வெளியான அறிக்கைக்கு அமைய, தொகுக்கப்பட்ட, தொகுக்கப்படாத காணொளிகள் குற்ற தடுப்புப் பிரிவினரிடம் வழங்குமாறு, இலத்திரனியல் ஊடகங்கள் இரண்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .