2025 ஜூன் 25, புதன்கிழமை

அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜர் கைது

Editorial   / 2019 ஜூன் 02 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜராகக் கடமையாற்றும்  நபர் ஒருவர், அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ- சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்  ஜோன் வோல்க் என்றழைக்கப்படும் மொஹமட்  நிசார் இம்ரான்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் 3 ஆடைகள், வாள், ட்ரோன் கமெரா, கையடக்கத் தொலைபேசி, ​கமெராக்கள் 2, மடிகணினி 2 என்பன பொலிஸ் விசேடப் படையணியால் ​மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக, ஒருங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .