2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘அடுத்த ஜனாதிபதி உயர்தரமாவது சித்தியடைந்திருக்க வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியொருவருக்கு நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான  தகுதி இருக்க வேண்டும் என்றும், அதற்காக சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டுக்கு தேவை நேர்மையாக பேசும், ஏதாவ​தொரு பிரச்சினையை மற்றையவர்கள் மீது சுமத்தாத ஒருவரே தேவை. அது மாத்திரமின்றி நாட்டு பிரச்சினை, உலகப் பிரச்சினைத் தொடர்பில் சிறந்த தெளிவுள்ள ஒருவரென்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .