2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

அதிக விலைக்கு விற்பனை : அரசாங்கம் எச்சரிக்கை

Freelancer   / 2025 ஜூன் 06 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உப்பு இறக்குமதியாளர்கள் அதிக விலைக்கு உப்பினை விற்பனை செய்தால், உப்புக்கான உச்சபட்ச விலையை நடைமுறைப்படுத்த நேரும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

உள்நாட்டில் உப்புக்கான தட்டுப்பாட்டு நிலவியதன் காரணமாக அதனை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 

மாறாக வர்த்தகர்கள் இலாபமீட்டுவதற்காக அல்ல. 

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கிலோ ஒன்று, 40 சதவீத வரியுடன் 77 ரூபா என்ற கிரய மதிப்பைக் கொண்டுள்ளது. 

மொத்தவியாபரிகள் 30 ரூபாய் வரையில் இலாபம் பெற அனுமதிக்கப்படுகின்றனர். 

அதன்படி ஒருகிலோ உப்பின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படலாம் 

அதனைத் தவிர்த்து அதிகவிலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அரசாங்கம் அதற்கு எதிராக செயற்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .