2025 ஜூன் 28, சனிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ் விசேட படையினர்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேடப் படையணியை ஈடுபடுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட காலப்பகுதிகளில் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணிப்பதால், இவ்வாறு பொலிஸ் விசேடப் படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மேலதிக கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகும் வாகனங்களை அப்புறப்படுத்த 30 கிலோமீற்றர்கள் இடைவெளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .