2025 ஜூன் 11, புதன்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சகோதரிகள் மரணம்

Freelancer   / 2024 டிசெம்பர் 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் கார் ஒன்று லொறியுடன் மோதியதில் 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா (10 வயது) , சதீஷா (12 வயது) ஆகிய  சிறுமிகளே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் தாய், தந்தை  படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறி மற்றும் அதே திசையில் பயணித்த கார், லொறியின் பின் பக்கம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10