2024 மே 02, வியாழக்கிழமை

அதிவேகத்தில் அதிக வருமானம்

Freelancer   / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 6 நாள்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சுமார் 235 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வாகனங்களின் நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாள்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட வீதிகளில் 53 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன என அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .