2025 ஜூன் 25, புதன்கிழமை

அத்துரலிய தேரருக்கு வியாழேந்திரன் ஆதரவு

Editorial   / 2019 ஜூன் 01 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை, உடனடியாக பதவி விலகக் கோரி, வண. அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக, இன்று (01) காலை 7 மணி முதல், இந்தப் போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.

இந்த மூவரும், உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதே, தங்களது கோரிக்கை என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில்,  இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழேந்திரன் ஆரம்பித்துள்ள போராட்டத்தில், அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றத.

கண்டி தலதா மாளிக்கைக்கு முன்பாகவே, அவர் நேற்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .