2024 மே 20, திங்கட்கிழமை

அனைத்து பிரச்சினைகளுக்கும் சஜித் தான் காரணம்: ரணில்

Simrith   / 2024 மே 09 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருந்தால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் சில விளக்கங்களை கோரியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது நல்லது என்று நான் நினைக்கிறேன். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என நான் எதிர்க்கட்சித் தலைவிடம் கூற விரும்புகிறேன். ஏப்ரல் 10 ஆம் திகதி அவர் பிரதமராக பதவியேற்றிருந்தால், எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினைகள் நான் என் திறனுக்கு ஏற்றவாறு இந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு செயல்படுகிறேன்," என்று ஜனாதிபதி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X