2025 ஜூன் 25, புதன்கிழமை

அபராதம் செலுத்த போலி தாளை வழங்கிய பெண் கைது

R.Tharaniya   / 2025 ஜூன் 24 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதம் செலுத்த முயன்ற ஒரு பெண்  ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23)கைது செய்யப்பட்டார்.

அம்பலாந்தோட்டை, பெரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், 8,000 ரூபாய் அபராதத்தை செலுத்தும் போது, ​​மற்ற நாணயத்தாள்களுடன் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றையும் கையளித்துள்ளார்.

நீதிமன்ற காசாளர் போலி நாணயத்தை அடையாளம் கண்டு, நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தப் பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .