2026 மே 05, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவுடனான இரண்டு ஒப்பந்தங்கள் மறுசீரமைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடன் 2011 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனநாயக ஆட்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டம் மற்றும் நிலையான மற்றும் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவதற்காக இலங்கை இந்த இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியானது, முறையே 35.95 மில்லியன் டொலரில் 47.81 மில்லியன் டொலராகவும், 33.86 டொலரிலிருந்து 44.52 மில்லியன் டொலராக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், திட்ட நிறைவு திகதியை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீடிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நிலையான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நவீன எரிசக்தி சேவைகளை உள்ளடக்குவதற்கான பொருத்தமான ஒப்பந்தங்களை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .