2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2019 மே 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சுமத்தி, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜுலை மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று சிசிர டீ ஆப்ரு, விஜித் மலல்கொட, பிரசன்ன ஜயவர்தன ஆகி​ய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நீதிபதி விஜித் மலல்கொட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இந்த வழக்கின் விசாரணைகளை ஜூலை மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக, நீதிபதிகளான  சிசிர டீ ஆப்ரு, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா ஆகியோர் இன்று தீர்மானித்துள்ளது.

அன்றைய தினத்தில் இவ்வழக்கின் சாட்சியாளர்களான ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, சட்டத்தரணி கே. டபிள்யு. ஜனரஞ்சன உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .