2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைச்சர்களான மங்கள- லக்ஸ்மன் மோதல்

Editorial   / 2019 மே 16 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் சபையாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவால் நியமிக்கப்பட்ட குழுவை நீக்கிவிட்டு, நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் புதிய பணிப்பாளர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதால், இரு அமைச்சர்களுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் சபையை அமைச்சர் மங்கள சமரவீர அவசர அவசரமாக நீக்கியுள்ளதுடன், நிதியமைச்சர் தலைமையில்  நேற்றைய தினம் (15) லிட்ரோ நிறுவன வளாகத்தில் பணிப்பாளர் சபை கூட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது.

எனினும் புதிய பணிப்பாளர் சபையை நியமிப்பதற்கு குறித்த நிறுவனத்தின் சேவையாளர் சபை  எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை புதிய பணிப்பாளர் சபை​க்கு எதிர்ப்பை தெரிவித்து, இதனைத் தடுக்குமாறு கோரி, பழைய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களால் கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டள்ளதாகவும், இதற்கமைய புதிய பணிப்பாளர் சபையின் நடவடிக்கைகள் இந்த மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .