Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 58 அமைச்சர்களைக் கொண்ட பெரிய அமைச்சரவையொன்று மஹிந்தவின் காலத்திலேயே காணப்பட்டது. நாம் சொல்கின்றோம் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல இடமளியுங்கள் என்று. அமைச்சர்களின் எண்ணிக்கை 35,36 ஐத் தாண்டினாலும் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அதிகாரம் இருக்குமாயின் 30 அமைச்சர்கள் என்பது சரிதான். ஆனால் ஏனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் போது 30 அமைச்சர்கள் என்ற மட்டுபாடு கடினமானது என்றார்.
ரவீந்திர சமரவீர, சரத் பொன்சேகா, வசந்த சேனாநாயக்க, ரங்கே பண்டார, பௌசி, பியசேன கமகே இவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago