Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 14 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவங்கொட பிரதேசத்தில் நேற்று (13) அமைதியின்மையைத் தோற்றுவித்த சகலருக்கும் எதிராக பாரபட்சமின்றி தண்டனை வழங்குமாறு, பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக, போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று மினுவாங்கொட பிரதேசத்துக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சில நாள்களாக எமது நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சம்பங்களில் எமது குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். இனவாத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கறுப்பு ஜூலையைப் போல், மீண்டும் ஒரு சம்பவம் இந்த நாட்டில் ஏற்படக் கூடாது. இதன் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒரே இனமாக அனைவரும் வாழ வெகு விரைவாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
வெளிநாடுகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக சேவையாற்றுவர். ஆனால் எமது நாட்டில் அவ்வாறு இல்லை. எனவே இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago