2025 ஜூன் 28, சனிக்கிழமை

அம்பலாந்தோட்டையில் பதற்றம்

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தொட்ட – கோகல்ல பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இ.போ.ச பஸ்ஸொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில்.அதனுள் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இன்று (25) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், குறித்த பஸ்ஸிலிருந்து கம்பிகளால் கட்டப்பட்டிருந்த மட்டையிலாலான பெட்டியொன்று மட்டுமே காணப்பட்டதாகவும் குறித்த பெட்டியை பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், இது பொதுமக்களை பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் திட்டமொன்று என்றும் தெரிவித்தனர்.

ஆகையால், குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பயங்கொள்ளத் தேவையில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அம்பலாந்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .