2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரச அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க திட்டம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அரசு அடுக்குமாடி குடியிருப்புகளை அடுத்த ஆண்டு மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான 45 அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றில் சுமார் 10,000 வீடுகள் இருப்பதாகவும் தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மறுசீரமைப்புத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும், அந்த வீட்டு வளாகங்களில் தற்போது வசிப்பவர்கள் தொடர்பான முடிவுகள் உட்பட, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் அறிவுறுத்தினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X