2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர்களை அழித்துவிட முடியாது

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கான தண்டனைகளை வழங்கி சீர்திருத்துவதை மாத்திரமே செய்ய வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் வஜீர அபேவர்தன, குற்றம் செய்த காரணத்துக்காக அரச ஊழியர்களை அழித்துவிட முடியாதெனவும் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாக சிறிகொத்தவில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

அரசாங்க ஊழியர்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் நல்லவிதமான பல தீர்மானங்​களை எடுத்திருந்தாகவும், அரச சேவையை பலப்படுத்தும் நோக்கிலேயே 19 ஆவது திருத்ததின் கீழ் அரச சேவை ஆணைக்ககுழு வலுவூட்டப்பட்டதெனவும் தெரிவித்தார்.

அதேபோல் 100 அரசாங்கத்திலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை ஐக்கிய தேசிய கட்சியே அதிகாரித்ததென தெரிவித்த அவர்,  12,500 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக பெறுவோர் தொடக்கம் அதிக சம்பளத்தை பெரும் சட்டமா அதிபர் வரையான சகல அரச ஊழியர்களுக்குமான சம்பளம் அதிகரிக்கப்பட்டதெனவம் தெரிவித்தார். 

அத்தோடு, கிராம சேவகர்களின் தரத்தில் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கும் ​வெளிநாடுகளுக்கு சென்று பயில்வதற்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கபட்டிருந்தனவெனவும், பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க உத்தேசிக்கப்பட்டு வந்தது என்றார். 

அத்தோடு, நாட்டில் எந்த இடத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் சகல அரசாங்க தரப்புகளும் ஒரே தருணத்தில் அறிந்துகொள்ளும் வகையில் அரச சேவையை வடிவமைக்கும்  முயற்சிகளை மேற்கொண்டு வந்தாகவும் தெரிவித்தார். 

இன்று அரச ஊழியர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லாது போயுள்ளதென தெரிவித்த அவர், அரச  பொறிமுறை இன்று இராணுவமயமாக் கபட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது என்றார். 

அரச சேவை ஊழியர்களும் மனிதர்கள் தான்  என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும், அரச ஊழியர்கள் தவறு செய்தனர் என்பதால்  அவர்களை அழித்துவிட முடியாதெனவும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X