2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அரசாங்க அதிபர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , மு.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றுவதற்கான சவால் தம்முன் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கிறார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள 'நில மெதுர' கட்டடத்தில் நேற்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கைப் பொருள் படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவைக் கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
 
சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5