Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம், ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு, வலுவான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
“மாகாண சபைகளின் நிர்வாகத்தை உத்தியோகபூர்வ அதிகாரிகளின் கீழ்ப்படிதலுக்கு கொண்டுவருதல், ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு சமமானதாக ஒத்திருக்கிறது” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் பலவற்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, கலைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான மாகாண சபைகளின் செயற்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளை இழந்து, அதிகாரத்துவத்துக்குள் சரணடையச் செய்தல், ஏற்றுக்கொள்ளமுடியாத ஜனநாயக விரோதச் செயற்பாடாகும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடனான அந்த விசேட கடிதம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, அரசாங்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளுக்கு நேற்று முன்தினம் (22) அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
“அதிகாரத்துவம் சர்வாதிகாரத்தின் இரட்டைச் சகோதரனைப் போல் உள்ளது” என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரதமர் தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு, தற்போதும் செயலில் உள்ளது என்பதனால், அந்தக் குழு, மீளாய்வு அறிக்கையை ஒருவாரத்துக்குள் கொடுக்கவேண்டியுள்ளது. அந்தக் காலம் நிறைவடைந்ததன் பின்னர், அதாவது, நவம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது” என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago