Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 17 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலமாகவே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வினை எட்ட முடியும். அது குறித்து இப்போதாவது அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியல் பிரச்சினை என்னவென்பது பிரதமர் ரணிலுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அவர் கூறினார்.
தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை வழங்குவதன் மூலமாகவே நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இதனையே நாம் தொடர்ச்சியாக சகல அரசாங்கங்களுக்கும் தெரிவித்து வருகின்றோம். தமிழர் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண எந்தத்தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகவே உள்ளோம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் இந்த விடயங்களை நாம் பேசியுள்ளோம். கடந்த நல்லாட்சியில் அதிகளவில் அவருடன் நாம் இந்த விவகாரங்கள் குறித்து பேசி தமிழ் மக்களின் நிலைமையை எடுத்துக்கூறியுள்ளோம். தமிழ் மக்களின் வேதனைகள், பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தெல்லாம் ரணிலுக்கு புதிதாக விளங்கப்படுத்த அவசியம் இல்லை என்றே கருதுகின்றோம்.
இப்போதுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தின் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை நாம் ஆதரிப்போம். மக்களுக்கான நலத் திட்டங்களை நாம் வரவேற்போம். அதற்காக சகல விதத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணை நிற்கும் என்பதல்ல இதன் அர்த்தம். தேவையான நேரங்களில் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரு சில ஒத்துழைப்புக்களை எம்மாலும் வழங்க முடியும்.
இப்போதுள்ள நிலைமைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கு விளங்கிக்கொண்டுள்ளது, உறுதியான அரசாங்கம் ஒன்று உருவானதும் எமது இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் எனவும் அவர் மிரருக்கு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
12 minute ago