2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ அரசியல்வாதிகள் உணரவில்லை ‘

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வேதனை, கண்ணீரை நாம் உணர்ந்தாலும்  நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரிகள் அதனை உணரவில்லையெனத் தெரிவித்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இரண்டு மாதங்கள் சென்றும்  இச்சம்பவத்துக்க பொறுப்புக் கூற வேண்டியவர்களை அடையாளங் காண்பதற்கு அல்லது தண்டனை வழங்க முடியாமை நாட்டின் துர்பாக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் ப்ரேசியா நகரில்  நேற்று (25) இலங்கையர்களைச் சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசாங்கத்தின் தலைவர்கள் தம்மை வந்து சந்திக்கும் போது, அவர்களுக்கு அறிவுரை வழங்​குவோம் என்ன செய்ய வேண்டுமென்று, ஆனால்  அவர்கள் எமது அறிவுரைக்கு அமைய வேலை செய்கிறார்களா என்பது நாட்டில் இடம்பெறும்  நடவடிக்கைகளில் மூலம் அறியலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, திர்காலத்தில் நாம் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றாத அரசியல் தலைவர்களை சந்திப்பதை நிறுத்திக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .