2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் பிணையில் விடுதலை

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமானமுறையில், நான்கு யானைக்குட்டிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு​டன் தொடர்புடைய, அலி ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு, நிபந்தனைகளுடன் கூடிய பிணையை வழங்கி, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று (26), உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையும், இரண்டு பிணையாட்களை முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இவர்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாதம் ஒரு தடவை, இரகசியப் பொலிஸில் முன்னிலையாகவேண்டுமெனவும், நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .