2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அலுவலக நேரங்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்கள் மற்றும் ரயில்களில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கு பொது மற்றும் தனியார் அலுவலக நேரங்களில் திருத்தங்களை பரிந்துரைக்க குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகள் மற்றும் முகாமைத்துவ அமைச்சு .து தொடர்பில் தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

இன்று நடைபெற்ற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவராக போக்குவரத்து சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்துக்குள் அலுவலக நேரங்களைத் திருத்துவது குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளதுடன் அது மேலதிக பரிசீலனைக்காக பொது நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .