Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, ஏற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியும், கட்சியின் ஆலோசகருமான மஹிந்த ராபக்ஷ, அழைப்பிதழையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்வழைப்பிதழை, கட்சியின் சிரேஷ்ட உப- தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனவிரத்ன, மிரிஹானையில் உள்ள, மஹிந்தவின் வீட்டுக்குச் சென்றே கையளித்துள்ளார்.
குருநாகலில், செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியன்று நடைபெறவிருக்கின்ற கட்சியின் மாநாட்டில் தான் பங்கேற்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ, தன்னிடம் தெரிவித்தார் என,அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மாநாட்டின் போது, கட்சியின் போஷகர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் கட்சியின் தலைவருக்கு இரு பக்கங்களிலும் ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago