2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை’

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும்  பாதுகாப்பு தொடர்பான விடயம் எவ்விதத்திலும் குறைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .