2025 ஜூன் 25, புதன்கிழமை

அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகிறார்

Editorial   / 2019 ஜூன் 02 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு,  அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டிய- ​செபஸ்தியர் தேவாலயத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஆம் திகதி இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவிலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .