Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய விசேட வர்த்தமானி மூலம், அஸ்வெசும நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்தப் பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 17.05.2024 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலும், இது தொடர்பில் இதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம்,
2025 ஜனவரி முதல் மார்ச் வரை 480,000 இடைநிலைக் குடும்பங்கள் 5000 ரூபாய். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 480,000 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு 5000 ரூபாய், 960,000 ஏழைக் குடும்பங்கள் 480,000 மாதாந்திர நிவாரணப் பலன்கள் 17,500 ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், இந்த கொடுப்பனவுகளில் பாதிக்கு உரிமை உண்டு.
மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில், பிற திறன் கொண்டவர்களுக்கு 7500 ரூபாயும், சிறுநீரக நோயாளிகளுக்கு 7500 ரூபாயும், முதியோர்களுக்கு 3000 ரூபாயும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது பாராளுமன்றத்தின் ஒப்புதல் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago