2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆக்கும் அரசியலமைப்பை எப்போதும் மாற்ற முடியாது

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யொஹான் பெரேரா
 
எப்போதுமே மாற்ற முடியாத அடிப்படை அமைப்புகளுடன் கூடிய அரசியலமைப்பை ஆக்கும் நோக்கில் அரசாங்கம் உள்ளதாக, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அவைத்தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் விரும்பினால் கூட அந்த அடிப்படையான அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தமுடியாதவாறு உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனம் என்பன பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள ஒற்றையாட்சி முறையையும் பௌத்த சமயத்துக்கான அந்தஸ்தும் மாற்றப்படமாட்டாதென அவர் தெரிவித்தார்.

வரலாற்றில் முதற்தடைவையாக பொதுமக்களின் அபிப்பிராயத்துக்கு இடம்கொடுக்கப்படுவதாகவும் கருத்துக் கணிப்பு ஊடாக மக்கள் அங்கிகாரமும் பெறப்படும் எனவும்  அவர் கூறினார்.

முன்னர் வாய்ப்புக்களை தவறவிட்டது போன்று, இனி நடக்கக் கூடாதென அரசாங்கம் இந்த முறையில் செயற்படுவதாக கூறிய அவர், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X