2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’ஆடைக் கட்டுப்பாட்டை செயற்படுத்தத் தேவையில்லை’

Editorial   / 2019 ஜூன் 08 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த சுற்றுநிரூபத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையால், அதன் விதிமுறைகளைச் செயற்படுத்தத் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சுற்றுநிரூபத்தைத் திருத்துவதற்கானப் பணிகளை, ரஞ்சித் மத்தும பண்டார முன்னெடுத்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்க அதிகாரிகளின் ஆடைகள் தொடர்பில், பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த மாதம் 31 ஆம் திகதி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டது.

இந்தச் சுற்றுநிரூபத்துக்கு பல எதிர்ப்புகள் எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .