2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் குதிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நீலமேகம் பிரசாந்த்

வழமையாக ஏப்ரல் மாதம் தரும் போனஸ் பணத்தை இவ்வருடம் வழங்கவில்லை  என தெரிவித்து, கொத்மலை வீ.டி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் (02) போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், “காலை 6மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வீடுகளுக்கு செல்கின்றோம். இடையில் ஆடைத்தொழிற்சாலையில் சொல்லிடங்கா கஸ்டத்தை அனுபவித்து வேலை செய்கின்றோம்.

சம்பளம் குறைவாக காணப்பட்டாலும் பொருளாதார சிக்கலால் வேலைப்பார்கின்றோம். நாங்கள் கஸ்டப்பட்டு வேலைப்பார்த்து வருடத்தில் மிஞ்சுவது இந்த போனஸ் பணம் மட்டும் தான்.

அதையும் இம்முறை தரமுடியாது என நிர்வாகத்தினர் கூறுகின்றனர். போனஸ் பணத்தை தரும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என்று கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .