2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஆட்சிக்கு வந்து 6 மாதங்களில் ‘1 அடிக்கல்லை கூட நாட்ட முடியவில்லை’

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழு, 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி, ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில், அரசாங்கத்தால் ஒரு அடிக்கல்லைக்கூட நாட்ட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

காலியில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 1 அடிக்கல்லையேனும் வைக்க முடியாமல் போயிருப்பது கவலையளிப்பதாகக் கூறினார்.

அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் கருத்துகளைச் செவிடுக்க முடியாத அரசாங்கம், எதிர்க்கட்சிக்கு சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க, சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் கூறிய அவர், தேர்தல் ஆணைக்குழு, 19ஆம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து எனவும் இதனாலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வரமுடிந்ததாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .