2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டப் பேரணியை தடுத்த பெண் பொலிஸார்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை, பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி, தடுத்து நிறுத்திய சம்பவம் இன்றும் (04) இடம்பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரச பொறியியலாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம், புறக்கோட்டை ரயில் நிலையத்திலிரந்து, ஜனாதிபதி செயலகம் வரை செல்ல முயன்ற போதே, வீதி தடைகளை ஏற்படுத்தி, பெண் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை ​முன்னோக்கிச் செல்லவிடாது, தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இதற்கு முன்னரும் இவ்வாறான முயற்சியில், பெண் பொலிஸார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .