2025 மே 17, சனிக்கிழமை

ஆற்றில் குதித்த பிக்கு சடலமாக மீட்பு

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, பண்டத்தர பிரதேசத்தில் உள்ள நில்வளா கங்கையில மிதந்த பிக்குவின் சடலத்தை  புதன்கிழமை (26) கடற்படையினர் மீட்டுள்ளனர்.

 செவ்வாய்க்கிழமை (25) காலை பிக்கு ஒருவர் நில்வளா கங்கையில் பாய்ந்ததால் அவரை தேடும் பணியில் கடற்படையினர்  ஈடுபட்டனர்.  இந்த பிக்குவின் சடலத்தையே கடற்படையினர் மீட்டதாக திஹகொட பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, பத்தேகம பிரதேசத்தில் உள்ள விகாரையில் சேவை புரிந்த 83 வயதுடைய பிக்குவே இவ்வாறு ஆற்றில் ஆற்றில் பாய்ந்துள்ளார்.

இவர் சிறிது காலம் நாதுனுகல பிரதேசத்திலுள்ள விகாரையில் சேவை புரிந்தார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .