2024 மே 12, ஞாயிற்றுக்கிழமை

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

Simrith   / 2024 ஏப்ரல் 28 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல இடங்களில் இன்று (28) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 

அத்தோடு, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X