2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Amirthapriya   / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்பம் காரணமாக, கடந்த சில நாட்களாக இலங்கையில் மழையுடனான வானிலை  அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு இந்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி, க. சூரியகுமாரன் தெரிவித்தார்.

இன்று (01) இலங்கையின் அநேகமானப் பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதோடு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமானளவில் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான  கடற்பிராந்தியம் மற்றும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியங்களில் அதிக மழைப் பெய்யக்கூடிய நிலை காணப்படுகிறது.

அத்தோடு, குறித்த கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 15 தொடக்கம் 20 கிலோமீற்றர வரை வீசக்கூடுமெனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்பதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X