2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 06 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம், ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத்தால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏப்ரல் 22 தொடக்கம் மே மாதம் 10ஆம் திகதி வரை நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சேவையில் இருந்து விலகுவதற்கான இப்புதிய திட்டத்தின் கீழ், இடைவிலகியவர்கள் நேரடியாக தங்களது படையணித் தலைமையகத்துக்கு சென்று அல்லது தொடர்புகொண்டு குறிப்பிட்ட பொதுமன்னிப்பு காலத்துக்குள் அவர்களுடைய விலகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் 6 மாதங்களுக்கு மேலாக சேவையை விட்டு விலகியவர்கள், மீண்டும் இராணுவத்தில் இணைய வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில், அவர்களை மீள் இணைப்பது சம்பந்தமாகவும் கவனத்திற்கொள்ளப்படும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .