2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இந்திய சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 'இலங்கை தமிழர்களை விடுவிக்கவும்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் தஞ்சம் கோரி வந்து சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் ஈழ எதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தொடர்ந்து கூறியதாவது,

'1983ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பிறகு, இலங்கைத் தமிழர்கள் தமது உயிருக்குப் பயந்து இந்தியாவிற்கு வந்தனர். இவ்வாறு வந்தவர்கள் தமிழகத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக அகதிகளாக உள்ளனர். இவர்கள் 107 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த ஈழ மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, இவை உச்ச கட்டத்தை அடையும் முன் அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுவிக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7