Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 29 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கில், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதென, முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நேற்று (28) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக்கு வந்ததும், இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு, நாளொன்றை வழங்கியதாகவும் இந்திய இராணுவம் இலங்கையின் தேசிய கொடிக்கு பதிலாக, வடக்கு, கிழக்குகென்று தனியான கொடியை அறிவிக்குமாறு, இந்திய இராணுவம் வரதராஜ பெருமாளுக்கு அறிவித்ததாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ, இதற்கு எதிர்ப்பை தெரிவித்து, பிரபாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago