2025 ஜூன் 18, புதன்கிழமை

இந்திய சுரங்கத்துறை பேராளர்களின் இலங்கை விஜயம்

Janu   / 2025 மே 27 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக இந்திய அரசின் சுரங்கங்கள் அமைச்சகம் தலைமையிலான பேராளர்கள்  சுரங்கங்கள் மற்றும் கனிமத் துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை ஆராய்வதற்காக 2025 மே 20 முதல் 22 வரை இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, ​​ கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துநெத்தி அவர்களைச் சந்தித்த இப்பேராளர்கள் , Kahatagaha Graphite Lanka Ltd., Lanka Mineral Sands Ltd., புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB), and Lanka Phosphate Ltd. உள்ளிட்ட இலங்கை அரசுக்குச் சொந்தமான கனிம நிறுவனங்களின் (SOEs) தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.  முதலீட்டு சபை (BOI) பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல்,  சுரங்க தொழில்நுட்பங்களில் நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கனிமத் துறையில் பெறுமதிசேர் கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடுதல் இந்த விஜயத்தின்  நோக்கமாகும்.

 இந்திய அரசின் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் கௌரவ ஸ்ரீ சதீஷ் சந்திர துபே மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துநெத்தி ஆகியோருக்கு இடையே கனிமத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து 2025 பெப்ரவரி 15 அன்று புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2025  மார்ச் 10 அன்று இந்திய அரசின் சுரங்க அமைச்சகச் செயலாளருக்கும், இலங்கை அரசின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பும் நடைபெற்றிருந்தது.

செயற்பாட்டு தோற்றப்பாடுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்வதற்காக இப்பேராளர்கள் இலங்கையில் உள்ள முக்கிய சுரங்க வளாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .