2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

இந்திய பிரஜைகள் மூவர் ஹட்டனில் கைது

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலாவதியான வீசாவுடன் ஹட்டனில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் இந்தியாவின் பெங்களுரு பகுதியில் இருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஹட்டனில் பஸ் நிலையத்துக்கு அருகில் கடையொன்றை வாடகைக்கு பெற்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடைய வீசா காலவாதியாகி ஆறு மாதங்கள் ஆகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .