2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இந்திய பிரதமரின் ட்விட்டர் முடக்கம்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் @narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான @narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது.

இதனை 25 இலட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், பிரதமரின் கொரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி ( PM-CARES) திட்டத்திற்கு பிட்காயின் வழியாக பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி தகவலறிந்த ட்விட்டர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இ-மெயில் வாயிலாக ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .